பதிவு செய்த நாள்
13 செப்2017
23:43
புதுடில்லி: ‘திவால் நடவடிக்கைக்கு ஆளான நிறுவனங்களுக்கு, வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்’ என, ‘அசோசெம்’ அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ரிசர்வ் வங்கி, வாராக்கடன் தொடர்பாக, 12 நிறுவனங்கள் மீது, திவால் நடவடிக்கை மேற்கொள்ள, வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்கள் மீது, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம், திவால் நடவடிக்கைகளை துவக்கி உள்ளது.
இந்நிலையில், ‘திவால் நிறுவனங்களுக்கான தீர்வு திட்டத்தின் கீழ், தள்ளுபடியாகும் வட்டித் தொகை உள்ளிட்ட கடன் நிலுவைக்கு, வருமான வரி, குறைந்தபட்ச மாற்று வரி ஆகியவற்றில் விலக்களிக்க வேண்டும்’ என, ‘அசோசெம்’ கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், திவால் நிறுவனங்களுக்கு, பொது வரி தவிர்ப்பு விதிகளில், விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய நிதி சேவைகள் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|