பதிவு செய்த நாள்
13 செப்2017
23:44
புதுடில்லி: மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான், டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி: ‘வாடிக்கையாளரிடம் இருந்து, சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என, ஏப்ரலில் வெளியிட்ட, அனைத்து ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான விதிமுறைகளில், தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
எந்தவொரு ஓட்டலும், வாடிக்கையாளரை கட்டாயப்படுத்தி, சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது. வாடிக்கையாளர் விரும்பினால், சேவை கட்டணம் தரலாம். அதற்காக, ஓட்டல் ரசீதில், சேவை கட்டணம் பகுதியில் எதுவும் குறிப்பிட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அப்படியே சேவை கட்டணம் குறிப்பிட்டாலும், அதன் அருகே, ‘வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்தது’ என்ற வாசகத்தை அச்சிட வேண்டும். ஆனால், பல ஓட்டல்கள், சேவை கட்டணம் வசூலிப்பதாக, புகார்கள் வருகின்றன. அதனால், ‘ஓட்டல்கள் வசூலிக்கும் சேவை கட்டணத்தை, அவற்றின் வருவாயுடன் சேர்த்து கணக்கிட்டு வரி வசூலிக்க வேண்டும்’ என, மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|