பதிவு செய்த நாள்
15 செப்2017
23:51
சென்னை : சுவீடனைச் சேர்ந்த, ஐகியா குழுமத்தின் துணை நிறுவனமாக, ஐகியா இந்தியா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், கட்டில், பீரோ போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, ஐதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் கடைகளை திறந்துள்ள, ஐகியா இந்தியா நிறுவனம், தற்போது, சென்னையிலும் கால் பதிக்க உள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஜுவென்சியோ மைஸ்டு கூறியதாவது: சென்னையில், இரு கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளோம். ஒவ்வொரு கடையும், தலா, 4 லட்சம் சதுரடி பரப்பளவில் அமையும். ஆறு மாதங்களுக்குள், அனைத்து துறைகளின் அனுமதி பெறப்பட்டு, ஓராண்டில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். இதற்காக, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த கடைகள், 2019 – 20ம் நிதியாண்டில், செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம், 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|