பதிவு செய்த நாள்
21 செப்2017
23:58
புதுடில்லி : தொலை தொடர்பு சேவையில், நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பு கட்டணம், நிமிடத்திற்கு, 14 காசுகளில் இருந்து, 6 காசுகளாக குறைக்கப்பட்டு உள்ளது.
அக்., 1 முதல், இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. 2018 ஜன., 1 முதல், அடியோடு கட்டணம் நீக்கப்பட உள்ளது. இந்த கட்டண குறைப்புக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், ‘ஆர்ஜியோ’வுக்கு சாதகமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளன.
இதை மறுத்து, ‘ஆர்ஜியோ’ வெளியிட்டுள்ள அறிக்கை: இணைப்பு கட்டண குறைப்பால், எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஏற்கனவே, நாங்கள், வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளை வழங்கி வருகிறோம். எட்டு ஆண்டுகளாக, ஒவ்வொரு முறையும், ‘டிராய்’ இணைப்பு கட்டணத்தை குறைக்கும் போது, இந்நிறுவனங்கள் எதிர்த்து வந்துள்ளன.
அதே சமயம், அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் உள்ளன. கிராமப்புறங்களில், தொலை தொடர்பு சேவை விரிவுபடுத்துவது பாதிக்கும் என, இந்நிறுவனங்கள் கூறுகின்றன; அவை, இணைப்பு கட்டணத்தை மானியமாக கருதுகின்றன. அந்நிறுவனங்கள் நிதி வசதியோடு இருக்க, மக்கள், மொபைல் போன் கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|