பதிவு செய்த நாள்
21 செப்2017
23:59
புதுடில்லி : விருந்தோம்பல் துறையில் ஈடுபட்டுள்ள, லெமன் டிரீ ஓட்டல்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது. இந்நிறுவனம், 19 கோடியே, 57 லட்சத்து, 97 ஆயிரம் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.
பிராண்டை பிரபலப்படுத்தவும், பங்குதாரர்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கும், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுவதால் கிடைக்கும் பலன்களை பெறுவதற்காகவும், இம்முயற்சியில் இறங்கி உள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் கம்பெனி, சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, ஜே.பி.மார்கன் இந்தியா, யெஸ் செக்யூரிட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன. லெமன் டிரீ ஓட்டல்ஸ் நிறுவனத்துக்கு, 24 நகரங்களில், 4,300 அறைகளுடன், 40 ஓட்டல்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|