பண்டிகை கால விற்பனை மந்தமாக இருக்க வாய்ப்புபண்டிகை கால விற்பனை மந்தமாக இருக்க வாய்ப்பு ... பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி ஊக்குவிப்பு திட்டம்: மத்திய அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2017
00:31

புதுடில்லி : மத்­திய அரசு, நாட்­டின் பொரு­ளா­தார மந்த நிலையை கருத்­தில் வைத்து, 40 – 50 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை, ஊக்­கு­விப்பு திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வது குறித்து, பரி­சீ­லித்து வரு­வ­தாக, தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: நடப்பு நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்­டில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5.7 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. ஜி.எஸ்.டி., அமல் கார­ண­மாக, இரண்­டா­வது காலாண்­டி­லும், வளர்ச்சி குறித்து உறு­தி­யாக கூற முடி­யாத நிலை உள்­ளது. இத­னால், நடப்பு நிதி­யாண்­டில், பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் ஏற்­படும் தாக்­கத்தை தடுக்க, ஊக்­கு­விப்பு திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது.இத்­திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­னால், நடப்பு நிதி­யாண்­டில், நிதிப் பற்­றாக்­குறை, இலக்கு அள­வான, 3.2 சத­வீ­தத்­தில் இருந்து, 3.5 சத­வீ­த­மாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

வங்கி, ரயில்வே உள்­ளிட்ட பல்­வேறு துறை­க­ளுக்­கான, பொரு­ளா­தார ஊக்­கு­விப்பு திட்­டம் இறுதி செய்­யப்­பட்­ட­தும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிர­த­மர் மோடியை சந்­தித்து ஆலோ­சனை நடத்­து­வார். இதை­ய­டுத்து, ஊக்­கு­விப்பு திட்­டம் குறித்த அறி­விப்பு வெளி­யா­கும் என, தெரி­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

சில தினங்­க­ளுக்கு முன், அருண் ஜெட்லி, வர்த்­த­கத் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்­சர் பியுஷ் கோயல், ‘நிடி ஆயோக்’ துணைத் தலை­வர், ராஜிவ் குமார் மற்­றும் பல்­வேறு துறை­களின் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார். அப்­போது, நடப்பு பட்­ஜெட்­டில், மூல­த­னச் செல­வி­னங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட, 3.10 லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக, செலவு செய்­வது குறித்து விவா­திக்­கப்­பட்­டது. அதற்­கான நிதியை, கடன் அல்­லது பொதுத் துறை நிறு­வ­னங்­களின், பங்கு விற்­பனை மூலம் திரட்­டு­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

72,500 கோடி ரூபாய் திரட்ட திட்டம்:
நடப்பு நிதி­யாண்­டில், மொத்த கடன் இலக்கு, 5.80 லட்­சம் கோடி ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. பொதுத் துறை நிறு­வ­னங்­களில், குறிப்­பிட்ட அள­வி­லான பங்­கு­களை விற்­பனை செய்­வ­தன் மூலம், 72,500 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. இது, முன்­னெப்­போ­தும் நிர்­ண­யிக்­கப்­ப­டாத இலக்­கா­கும்.
வங்கி துறைக்கு அரசு ஆதரவு: அருண் ஜெட்லி:
மும்­பை­யில், இந்­திய வங்­கி­கள் கூட்­ட­மைப்­பின் ஆண்டு பொதுக்­கூட்­டத்­தில், மத்­திய நிதி அமைச்­சர் அருண் ஜெட்லி பேசி­ய­தா­வது: வங்­கி­களின் பிரச்­னை­க­ளுக்கு எத்­த­கைய தீர்வு தேவைப்­பட்­டா­லும், அதை அரசு வழங்­கும். வங்கி துறை, ‘பேசல் – 3’ விதி­களை பின்­பற்ற, தேவை­யான நிதி­யா­தா­ரங்­கள் உரு­வாக்­கப்­படும். வங்கி துறைக்கு, அரசு ஆத­ரவு தொட­ரும். ஜி.எஸ்.டி., அம­லாக்­கம், முதற்­கட்­டத்­தில் எதிர்­பார்த்­ததை விட, சுமு­க­மாக நடந்­தது. ஏரா­ள­மா­னோர், தற்­போது வரி வரம்­பிற்­குள் வந்­துள்­ள­னர். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)