பதிவு செய்த நாள்
25 செப்2017
01:05
வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைக்கு, தீர்வு காணும் அதிரடி முயற்சிகளில் ஒன்று, அக்டோபர் 3ம் தேதி ஆரம்பிக்கவிருக்கிறது. அன்று பங்குச் சந்தையில் பூகம்பம் இல்லையென்றாலும், சின்னச் சின்ன லட்சுமி வெடிகளேனும் வெடிக்கும் என்று நம்பலாம். அதென்ன அதிரடி முயற்சி?ஒரு நிறுவனத்தின் கடனை, 90 நாட்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படாத போதுதான், ‘வாராக் கடன்’ என்று வரையறை செய்கின்றன வங்கிகள். அதன் பின் தான், அந்த நிறுவனங்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் முயற்சிகள் துவங்கும். கடிதங்கள், நினைவூட்டல்கள் என்று துவங்கி, படிப்படியாகச் சூடுபிடிக்கும் வசூல் வேட்டை, பயன் தராத போது, பிரச்னை பூதாகரமாகும்.இப்படித்தான், இன்றைக்கு இந்திய வங்கிகளின் வாராக்கடன் தொகை, 10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இதை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியை, பங்குச் சந்தைகளின் கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ துவங்கிஉள்ளது.ஒரு நாள் தாமதம்இதன்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், வங்கிகளிலோ, இதர நிதி அமைப்புகளிடமோ கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்துவதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டாலும், அந்த விவரத்தை பங்குச் சந்தைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது, ‘செபி.’அது கடன் தொகையாக இருக்கலாம், வட்டியாக இருக்கலாம், கடன் பத்திரங்களாக இருக்கலாம், முன்னுரிமை பங்குகளாக இருக்கலாம், எந்த நிதி ஆவணமாக வேண்டுமானாலும் இருக்கலாம். திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய தொகை, திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய நாளில், திருப்பப்படவில்லை என்றால், அந்த விவரத்தை பங்குச் சந்தைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதிலும் ஒரு சூப்பர் டிவிஸ்ட் இருக்கிறது. பொதுவாக வங்கிகள் ஒரு பட்டியலை வைத்திருக்கும். அதில், 30 நாட்களுக்கு மேல், 60 நாட்களுக்கு மேல், 90 நாட்களுக்கு மேல் கடனைத் திருப்பிச்செலுத்தாத நிறுவனங்கள் என்று பிரித்து வகைப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் பட்டியல், இத்தனை ஆண்டுகளும் வங்கிகளுக்குள் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது. இனிமேல் இப்பட்டியலை வெளிப்படையாக, வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.கடன் சுமை எவ்வளவு?கடன் தவணை செலுத்தப்படாத முதல் மாதமே, விஷயம்வெளிச்சத்துக்கு வந்துவிடும்என்பது முக்கியமான பலன். அதுவும் பங்குச் சந்தைகளுக்கு, குறிப்பிட்ட நிறுவனங்கள் தாமே முன்வந்து இந்தத்தகவலை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதால், அந்த நிறுவனங்கள் மீது கடுமையான அழுத்தம் ஏற்படும். அவர்களுடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்படலாமோ என்ற அச்சம் தோன்றும்.இதனால், சரியான தேதியில், உரிய தவணைத் தொகையைச் செலுத்திவிடும் கட்டுப்பாடுக்கும், ஒழுங்குக்கும் இத்தகைய நிறுவனங்கள் தள்ளப்படும். யாருக்குத் தெரியப் போகிறது என்று விட்டேத்தியாக இனி இருக்க முடியாது. நிறுவனத்தின் கடன் சுமை எவ்வளவு, அதைச் செலுத்த முடியாமல் திண்டாடும் நிலை என அனைத்தும் வெளிப்படையாகத் தெரிய வந்துவிடும். அழுக்கு மூட்டைகளை ரொம்ப நாளைக்கு கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைக்க முடியாது. அவை வெளியே வந்து நாற்றத்தைக் கிளப்பிவிடவே செய்யும்.இந்த நடவடிக்கையால் வங்கிகள் ஆரம்பத்திலேயே உஷாராகிவிடும். விரைந்து அவர்களிடமிருந்து தவணையை வசூல் செய்யவேண்டிய அழுத்தம் ஏற்படும். தள்ளிப் போட முடியாது, சால்ஜாப்பு சொல்ல முடியாது. கடன் தவணைகள்கொடுத்த கடன், மொத்தமாகத் திரும்பி வராமல் போய்விடுவதற்கான வாய்ப்பும்இருப்பதால், அதை மனதில் வைத்துக்கொண்டு, அதற்கேற்ப போதிய நிதியை ஒதுக்கி வைத்துக் கொள்ளவும்இந்த நடவடிக்கை வழிசெய்யும்.நிறுவனங்களின் பெயர் வெளியே தெரிந்தவுடன், ரேட்டிங் நிறுவனங்களும் உஷாராகிவிடும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தரத்தை இந்த நிறுவனங்கள் மதிப்பீடு செய்கின்றன. அதில் வரவுகளோடு, செலவுகளையும் கடன்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டே இவை மதிப்பீடு செய்கின்றன.இந்த நிலையில், கடன் தவணைகளை உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்றால், அத்தகைய நிறுவனத்தின் மதிப்பு குறைக்கப்படும். இதனால், முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கத் தயங்குவர். தகிடுதத்தம் செய்ய முடியாதுவங்கிகளும் இத்தகைய நிறுவனங்களுக்கு அடுத்தடுத்த கடன்களை கொடுக்கத் தயங்கும். தொடர்ச்சியாக தவணை தொகைகளைச் செலுத்துவதில் தாமதங்கள் ஏற்படுமானால், அந்த நிறுவனங்களின் மதிப்பு மிகவும் சரிந்து போகும். அவற்றால் திறம்படச் செயல்பட முடியவில்லை, தத்தளிக்கின்றன என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ள முடியும்.‘செபி’யின் உத்தரவு, நிறுவனங்களிலும், வங்கிகளிலும் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதில் ஏதேனும் இடறல் ஏற்படுமானால், பிரச்னை உடனே வெளியே வந்துவிடும்.தும்பை விட்டு, வாலைப் பிடிக்காமல், ஆரம்பத்திலேயே வங்கிகள் எச்சரிக்கை பெற முடியும்.ஒரு வங்கியில் கடன் வாங்கி, மற்றொரு வங்கியின் கடனை அடைப்பது என்றெல்லாம் இனி நிறுவனங்கள் தகிடுதத்தம் செய்ய முடியாது. அந்த நிறுவனத்தின் நிலைமை பளிச்சென்று வெளியே தெரிந்துவிடுவதால், இதர வங்கிகளும் நிதி அமைப்புகளும் கடன் கொடுக்காமல், ‘ஜகா’ வாங்கிக் கொள்ளும்.நிறுவனங்களின் நிதி நிலைமையின் மீது இருந்த மாயத் திரை விலக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது. அந்த வகையில்‘செபி’யின் முன்முயற்சி வரவேற்கத்தக்கதே.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|