பதிவு செய்த நாள்
12 அக்2017
00:00
புதுடில்லி : ‘நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், ஐ.டி., நிறுவனங்களின் வருவாய், மிதமான அளவிற்கே வளர்ச்சி கண்டிருக்கும்’ என, நிதிச் சேவை நிறுவனங்கள் கணித்துள்ளன.
ஜூலை – செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், ஐ.டி., நிறுவனங்களுக்கு, சில பிரிவுகள் வாயிலான வருவாய் குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.குறிப்பாக, வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் சில்லரை விற்பனை துறைகளின் மந்த நிலை, ஐ.டி., நிறுவனங்களின் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும்.அதே சமயம், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ’ ஆகிய நிறுவனங்களுக்கு, சேவைகள் ஏற்றுமதி மூலம், அன்னிய செலாவணி வாயிலான வருவாய் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்டில், இன்போசிஸ் தலைவராக, நந்தன் நிலேகனி பொறுப்பேற்ற பின், அந்நிறுவனம் வெளியிட உள்ள, முதல் நிதி அறிக்கை குறித்து, சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மதிப்பீட்டு காலாண்டில், வங்கி, நிதிச் சேவைகள், சில்லரை விற்பனை துறைகளின் மந்த நிலையால், ஐ.டி., நிறுவனங்களின் வருவாயில், மிகப்பெரிய வளர்ச்சி இருக்காது.
‘எனினும், பவுண்டு, யூரோ ஆகியவற்றுக்கு எதிரான, டாலர் மதிப்பு குறைவால், ஐ.டி., நிறுவனங்களின் அன்னிய செலாவணி வருவாய், 0.8 – 1.60 சதவீதம் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது’ என, ‘கோடக் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டிஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நடப்பு நிதியாண்டில், ஐ.டி., – பி.பி.ஓ., நிறுவனங்களின் ஏற்றுமதி, 7 – 8 சதவீதம் வளர்ச்சி காணும்’ என, ‘நாஸ்காம்’ தெரிவித்துள்ளது.
3 நிறுவனங்கள்:
டி.சி.எஸ்., அதன் இரண்டாவது காலாண்டு அறிக்கையை, இன்று வெளியிடுகிறது. இதை தொடர்ந்து, விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள், அக்., 17, 24ல், வருவாய் விபரங்களை வெளியிட உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|