ரிலையன்ஸ் நிப்பான் லைப் பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ அனுமதிரிலையன்ஸ் நிப்பான் லைப் பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ அனுமதி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.10 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.10 ...
இந்தாண்டு ஜி.டி.பி., 7 சதவீதமாக குறையும்: உலக வங்கி மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2017
00:01

வாஷிங்டன் : ‘பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் ஆகி­ய­வற்­றின் தாக்­கத்­தால், இந்­தாண்டு, ஜி.டி.பி., எனப்­படும், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7 சத­வீ­த­மாக குறை­யும்’ என, உலக வங்கி மதிப்­பிட்டு உள்­ளது.

இது குறித்து, உலக வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த, 2015ல், இந்­தி­யா­வின், ஜி.டி.பி., 8.6 சத­வீ­த­மாக இருந்­தது; இது, இந்­தாண்டு, 7 சத­வீ­த­மாக குறை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்கு, மத்­திய அரசு மேற்­கொண்ட, பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் ஆகி­ய­வற்­றால் ஏற்­பட்ட தாக்­கமே கார­ணம். அதே சம­யம், மத்­திய அரசு மேற்­கொள்­ளும் எண்­ணற்ற சீர்­தி­ருத்­தங்­களும், அரசு திட்­டங்­க­ளுக்­கான கூடு­தல் நிதி ஒதுக்­கீ­டும், பெருகி வரும் தனி­யார் முத­லீ­டு­களும், 2018ல், ஜி.டி.பி., வளர்ச்­சியை, 7.3 சத­வீ­த­மாக உயர்த்­தும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நிலை­யான வளர்ச்சி கார­ண­மாக, நாட்­டில் வறுமை குறைந்து, அமைப்பு சாரா துறை­யி­னர் நல­னில், கூடு­தல் கவ­னம் செலுத்­தும் சூழல் உரு­வா­கும். இந்­திய பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­பட்­டுள்ள மந்த நிலை­யால், தெற்­கா­சிய பொரு­ளா­தா­ரத்­தின் வளர்ச்­சி­யும் பாதிக்­கப்­பட்டு உள்­ளது. இதன் கார­ண­மாக, கிழக்கு ஆசியா மற்­றும் பசி­பிக் பிராந்­தி­யத்தை அடுத்து, இரண்­டா­வது இடத்­திற்கு, தெற்­கா­சியா தள்­ளப்­பட்டு உள்­ளது. இந்­தி­யா­வின் உண்­மை­யான பொரு­ளா­தார வளர்ச்சி, 2015ல், 8 சத­வீ­த­மாக இருந்­தது. இது, 2016ல், 7.1 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இந்த வளர்ச்சி, நடப்­பாண்டு, ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்­டில், 5.7 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது.

நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் சுணக்­கம் ஏற்­பட்­டுள்ள போதி­லும், ஏழா­வது ஊதி­யக் குழு­வின் பரிந்­து­ரையை அமல்­ப­டுத்­திய பின், பொதுத் துறை மற்­றும் தனி­யார் துறை­யில், நுகர்வு அதி­க­ரித்­துள்­ளது. இதற்கு, சாத­க­மான பருவ மழை­யும், வேளாண் உற்­பத்­தி­யும், அதை தொடர்ந்து, கிரா­மப்­பு­றங்­களில் தேவைப்­பாடு அதி­க­ரித்­துள்­ள­தும் கார­ணம் என­லாம். ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­திற்கு பின், தயா­ரிப்பு மற்­றும் சேவை­கள் துறை வளர்ச்­சி­யில், பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது. ஜி.எஸ்.டி.,யின் தாக்­கம், 2018 துவக்­கம் வரை இருக்­கும். அதன்­பின், வளர்ச்சி சூடு­பி­டிக்­கும். முழு ஆண்­டிற்­கான, ஜி.டி.பி., 7 சத­வீ­த­த்தை தாண்டி, 2020ல், 7.4 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

8 சதவீதத்தை தாண்டும்:
பன்­னாட்டு நிதி­ய­மும், நடப்பு ஆண்­டுக்­கான, இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சியை, 0.5 சத­வீ­தம் குறைத்து, 6.7 சத­வீ­த­மாக மறு­ம­திப்­பீடு செய்­துள்­ளது. அது போல, 2018க்கான மதிப்­பீட்டை, 0.30 சத­வீ­தம் குறைத்து, 7.4 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­துள்­ளது. அதே சம­யம், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான அரசு, வலு­வான கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்த மேற்­கொண்டு வரும் சீர்­தி­ருத்த திட்­டங்­க­ளால், நடுத்­தர கால அள­வில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 8 சத­வீ­தத்தை தாண்­டும் என, பன்­னாட்டு நிதி­யம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)