பதிவு செய்த நாள்
12 அக்2017
14:38
நியூயார்க் : அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் இந்தியாவின் வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக பணப்புழக்கம் நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை தான். அத்துறை இன்னும் ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் மக்கள் அடையும் சிரமங்களை தவிர்க்க, ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறைப்படுத்தப்பட உள்ளது.
சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என சில மாநிலங்களும், வேண்டாம் என சில மாநிலங்களும் கூறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நவம்பர் 9 ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் வீடு வாங்குவோர் இனி ஒரு வரி மட்டும் செலுத்தினால் போதும்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்தியாவை மாற்றுவதற்கான அடிப்படை சீர்திருத்தம் ஆகும். இதனால் அதிக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடக்கும். இது குறுகிய கால சவாலாக இருந்தாலும் நீண்ட காலம் பயனளிக்கக் கூடிய திட்டமாகும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|