பதிவு செய்த நாள்
13 அக்2017
05:55
புதுடில்லி : தொடர் இழப்பு, கடன் சுமை ஆகியவை காரணமாக, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைகிறது.
இது குறித்து, இந்நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள கூட்டறிக்கை: டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைகிறது. இதன் மூலம், டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மஹாராஷ்டிர நிறுவனங்களின், 19 தொலை தொடர்பு வட்டங்களைச் சேர்ந்த, நான்கு கோடி வாடிக்கையாளர்கள், பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களாக மாறுவர். ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதிக்குப் பின், இந்த இணைப்பு நடவடிக்கை துவங்கும்.
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை இணைத்துக் கொள்வதற்காக, அதன், 40 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, பார்தி ஏர்டெல் ஏற்காது. அதுபோல, இந்த இணைப்பு நடவடிக்கைக்கு, ரொக்கமும் வழங்கப்படாது. அகண்ட அலைவரிசை உரிமத்திற்கான, 9,000 – 10 ஆயிரம் கோடி ரூபாயில், செலுத்த வேண்டிய, 70 – 80 சதவீத தொகையையும், டாடா குழுமமே செலுத்தும்.
‘‘பல வகையில் சிந்தித்து, இந்த இணைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளோம். இது, பங்கு முதலீட்டாளர்களுக்கு பயன் அளிக்கும்,’’ என, டாடா சன்ஸ் தலைவர், என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|