பதிவு செய்த நாள்
13 அக்2017
05:56
மும்பை : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, குறுகியகால மூலதன கடன் வழங்குவதற்கு, ‘எஸ்.எம்.இ., அசிஸ்ட்’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்.எம்.இ., அசிஸ்ட் திட்டத்தில், நிறுவனங்கள் செலுத்திய, ஜி.எஸ்.டி.,யில், திரும்பப் பெற உள்ள, உள்ளீட்டு வரி ஆதாயத்தின் அடிப்படையில், கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், குறைந்த வட்டியில், குறுகிய கால கடன் பெற்று, தவணையில் திரும்ப செலுத்தலாம். இந்த கடன் வசதி மூலம், நிறுவனங்கள், உள்ளீட்டு வரி ஆதாயத்தை திரும்பப் பெறும் வரை, மூலதன தேவைகளை சமாளிக்கலாம். இத்திட்டத்தின் செயலாக்க கட்டணம், 2,000 ரூபாய்.
கடன் வேண்டி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், உள்ளீட்டு வரி பயனை உறுதிப்படுத்துவதற்காக, ‘ஆடிட்டர்’ கையொப்பமிட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்களாக உள்ள, சிறு, நடுத்தர நிறுவனங்கள், 2018 மார்ச், 31 வரை, இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|