பதிவு செய்த நாள்
14 அக்2017
03:58
புதுடில்லி : கடந்த, 6ம் தேதி, டில்லியில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில் நடந்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 60க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க, முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், ஜூலை, 1க்கு முன் வாங்கிய, வாகனங்கள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வகை வாகனங்களுக்கு, ஆயத் தீர்வையை உள்ளடக்கிய, ஜி.எஸ்.டி.,யில், 65 சதவீதம் மட்டும் செலுத்தலாம்; மூன்று ஆண்டுகளுக்கு, இந்த சலுகை கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், ஜூலைக்கு முன் வாங்கிய, வாகனங்கள் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களை, விற்கும் போது, ஜி.எஸ்.டி.,யில், 65 சதவீதம் மட்டும் செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையால், பெரும்பான்மையான வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., 43 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|