பதிவு செய்த நாள்
16 அக்2017
00:04
வீடுகளின் விற்பனையில் தேக்கம் நிலவும் சூழலில், குறைந்த விலை பிரிவில் அதிக அறிமுகங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
டில்லி, சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நாட்டின், 10 முக்கிய நகரங்களில், வீடுகளின் விற்பனைக்கான தேவை குறைந்துள்ளது என, ‘கிரிசில்’ ஆய்வு தெரிவிக்கிறது.இந்த நிலைக்கான காரணங்களும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்திருப்பதால், வீடு வாங்க விரும்பும் அல்லது திட்டமிட்டு உள்ளவர்கள் இது குறித்து தீர்மானமாக முடிவெடுக்காமல் காத்திருக்கின்றனர்.
மேலும், ஐ.டி., துறையில் பணி குறைப்பு உள்ளிட்ட நிகழ்வுகளால் வீட்டுக்கடன் பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இவை தவிர, புதிய வீடுகளுக்கான கடன் பெறும் போது வீட்டுக்கடனுக்கான மாதத் தவணை அதிகரித்திருப்பது, வாடகை வீடே மேலானது என பலரை நினைக்க வைத்துள்ளது. அடுத்த, 12 மாதங்களில் இந்த நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என குறிப்பிட்டு இருந்தாலும், குறைந்த விலை பிரிவில் அதிக அறிமுகங்கள் நிகழவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|