பதிவு செய்த நாள்
16 அக்2017
10:51
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்துடன் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 16-ம் தேதி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 254.63 புள்ளிகள் உயர்ந்து 32,687.32-ஆக வர்த்தகமானது. இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி 32,686.48 புள்ளிகளை எட்டியதே அதிக உச்சமாக இருந்த நிலையில் இப்போது ஒரு புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்திருக்கிறது.
தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 75 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 10,242.45 புள்ளிகளை எட்டியது. இருப்பினும் காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 86 புள்ளிகளும், நிப்டி 32 புள்ளிகளும் உயர்வுடன் காணப்பட்டன.
நாட்டின் முன்னணி நிறுவன பங்குகளான வங்கி, எப்எம்சிஜி., ஆட்டோமொபைல் மற்றும் எண்ணெய், எரிவாயு தொடர்பான பங்குகள் அதிக ஏற்றம் கண்டதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமும் இன்றைய வர்த்தகம் உயர காரணமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|