எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி சந்தையில் ‘கோல்டு ஆப்ஷன்’ வர்த்தகம் துவக்கம்எம்.சி.எக்ஸ்., கமாடிட்டி சந்தையில் ‘கோல்டு ஆப்ஷன்’ வர்த்தகம் துவக்கம் ... ஜி.எஸ்.டி., விதிமுறை தளர்வு நகை வியாபாரிகள் மகிழ்ச்சி ஜி.எஸ்.டி., விதிமுறை தளர்வு நகை வியாபாரிகள் மகிழ்ச்சி ...
‛அன்னிய செலாவணி கையிருப்பால் எந்த தாக்கத்தையும் இந்தியா சமாளிக்கும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2017
23:54

சிங்கப்பூர் : ‘இந்­தி­யா­வின் அன்­னிய செலா­வணி கையி­ருப்பு, சாதனை அள­வாக, செப்­டம்­ப­ரில், 40,250 கோடி டால­ராக உயர்ந்து உள்­ள­தால், எத்­த­கைய அன்­னிய இடர்ப்­பா­டு­க­ளை­யும், அந்­நாடு சுல­ப­மாக சமா­ளிக்­கும்’ என, ‘டெவ­லப்­மென்ட் பேங்க் ஆப் சிங்­கப்­பூர்’ தெரி­வித்து உள்­ளது.

இது குறித்து, இவ்­வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த, 2013ல், அமெ­ரிக்க அரசு, ‘பொரு­ளா­தார ஊக்­கு­விப்பு நட­வ­டிக்கை படிப்­ப­டி­யாக குறைக்­கப்­படும்’ என, அறி­வித்­தது. இதன் தாக்­கம், இந்­தி­யா­வி­லும் எதி­ரொ­லித்­தது. அப்­போது, நாட்­டின் அன்­னிய செலா­வணி கையி­ருப்பு, 27,500 கோடி டால­ராக குறைந்து இருந்­தது. அடுத்து வந்த ஆண்­டு­களில், இந்­தி­யா­வில், அன்­னிய நிதி நிறு­வ­னங்­க­ளின் முத­லீடு அதி­க­ரித்­தது. நிகர அள­வில், அன்­னிய நேரடி முத­லீ­டு­கள் அதி­கம் குவிய துவங்­கின. இத­னால், நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை குறைந்­தது. இது போன்ற சாத­க­மான அம்­சங்­கள் கார­ண­மாக, செப்., நில­வ­ரப்­படி, நாட்­டின் அன்­னிய செலா­வணி கையி­ருப்பு, 40,250 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.

ஜன., – ஜூன் வரை­யி­லான அரை­யாண்­டில், டாலர் வரத்து வளர்ச்சி குறிப்­பி­டத்­தக்க வகை­யில் அதி­க­ரித்­தி­ருந்­தது. அதன்­பின், இந்த வளர்ச்­சி­யில் சற்று தொய்வு நிலை ஏற்­பட்­டுள்­ளது. தற்­போது, அன்­னிய நிதி நிறு­வ­னங்­க­ளின் முத­லீ­டு­கள் மந்­த­மாக உள்­ளன; நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றை­யும் அதி­க­ரித்­துள்­ளது. அத­னால், அன்­னிய செலா­வணி கையி­ருப்­பின் வளர்ச்­சி­யும், மித­மா­கவே இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. உதா­ர­ண­மாக, முதல் அரை­யாண்­டில், மாதம் சரா­ச­ரி­யாக, 380 கோடி டாலர் குவிந்­தது; இது, ஆகஸ்­டில், 40 கோடி டால­ராக சரி­வ­டைந்­தது. இந்­நி­லை­யில், செப்­டம்­ப­ரில், 150 கோடி டாலர் வெளி­யேறி உள்­ளது. இத்­த­கைய சூழலில், சர்­வ­தேச அள­வில், டால­ருக்­கான தேவை மேலும் அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில், அது, உள்­நாட்டு நிதிச் சந்­தை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.

அன்­னிய செலா­வணி சந்­தை­யில், டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பில், அதிக ஏற்­றத்­தாழ்வு உண்­டா­கும். அத்­த­கைய சூழ­லில், ரிசர்வ் வங்கி, பெரு­ம­ளவு டாலரை புழக்­கத்­தில் விட்டு, நிலை­மையை சமா­ளிக்க முற்­படும். இதன் மூலம், ரூபாய் மதிப்­பின் வீழ்ச்­சியை கட்­டுக்­குள் கொண்டு வர, ரிசர்வ் வங்கி முய­லும். இதன்­படி, ரிசர்வ் வங்கி, அதி­க­ள­வில் டாலரை புழக்­கத்­தில் விடும்­பட்­சத்­தில், அத­னி­டம் உள்ள, அன்னிய செலா­வணி கையி­ருப்பு குறையும். அத்­த­கைய சூழல் ஏற்­பட்­டா­லும், அதை சுல­ப­மாக சமா­ளிக்­கும் ஆற்­றல், இந்­தி­யா­விற்கு உள்­ளது. சர்­வ­தேச நில­வ­ரம் கார­ண­மாக ஏற்­படும், எத்­த­கைய தாக்­கத்­தை­யும் சமா­ளிக்­கும் வகையில், இந்­தி­யா­வி­டம், போது­மான அன்­னிய செலா­வணி கையி­ருப்பு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டுள்­ளது.

ஆசிய நாடுகளில்:
அமெ­ரிக்க மத்­திய வங்கி, பொரு­ளா­தார ஊக்­கு­விப்பை படிப்­ப­டி­யாக குறைக்க உள்­ள­தாக, 2013 மே மாதம் அறி­வித்­தது. அது முதல், ஆசிய நாடு­களில், ஜப்­பான் நீங்­க­லாக, இந்­தி­யா­வில் மட்­டுமே, அன்­னிய செலா­வணி கையி­ருப்பு, மிக அதி­க­ள­வில் உயர்ந்­துள்­ளது.-டி.பி.எஸ்., சிங்கப்பூர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)