பதிவு செய்த நாள்
20 அக்2017
00:19
மும்பை : நகைகள் உள்ளிட்ட பொருட்களை, ‘இ – வே பில்’ மூலம், ஒரு மாநிலத்திற்கு உள்ளே அல்லது வெளியே கொண்டு செல்வதற்கான விதிமுறையை, மத்திய அரசு தளர்த்தி உள்ளது.
இது குறித்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பின் தலைவர், நிதின் கந்தல்வால் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு, நகை வியாபாரிகளுக்கு மிகுந்த மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தற்போதுள்ள முறைப்படி, ஒரு மாநிலத்திற்கு உள்ளே அல்லது வெளியே நடைபெறும் நகை கண்காட்சிக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ, நகைகளை கொண்டு சென்றால், முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும். தற்போது, இந்த நடைமுறை தளர்த்தப்பட்டு உள்ளது.
இனி, ஜி.எஸ்.டி., பதிவு செய்த இடத்தில் இருந்து ஒருவர், உரிய அனுமதியுடன், நகைகளுக்கான, ‘டெலிவரி’ ரசீதுடன் செல்லலாம். கூடவே, விலைப் பட்டியலையும் எடுத்துச் செல்லலாம். கண்காட்சியில் நகைகள் விற்பனை செய்யப்பட்டால், விலைப் பட்டியலை வழங்கலாம். இந்த முறையால், முன்கூட்டியே வரி செலுத்தும் சுமை குறையும். அத்துடன், விற்பனையாகாத நகைகள் குறித்த விபரங்களை அளித்து, வரியை திரும்பப் பெறுவதில் ஏற்படும் கால தாமதமும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|