பதிவு செய்த நாள்
20 அக்2017
00:20
மும்பை : பிரிட்டிஷ் பெட்ரோலியம் என, முன்னர் அழைக்கப்பட்ட, பி.பி. பி.எல்.சி., நிறுவனம், இந்தியாவில், பெட்ரோல் விற்பனை நிலையங்களை அமைக்க உள்ளது. இந்நிறுவனம், ஆர்.ஐ.எல்., எனப்படும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்து, இந்த பெட்ரோல் நிலையங்களை அமைக்க உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு, 3,500 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் உரிமம் மற்றும் ஒப்புதல் கிடைத்தது. ‘‘ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பெட்ரோல் நிலையங்களை அமைப்பதற்கான பேச்சு நடைபெற்று வருகிறது. அனைத்து வரையறைகளின் மீதும், இணக்கமான முடிவு எட்டப்படும் என, நம்புகிறோம். ‘‘எனவே, இது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, நடப்பு காலாண்டில் அல்லது அடுத்த காலாண்டில், பெட்ரோல் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும்,’’ என, ஆர்.ஐ.எல்., கூடுதல் நிதி அதிகாரி, வி.ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
நாடு முழுவதும், 57 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதில், பெரும்பான்மையானவை, பொதுத் துறையைச் சேர்ந்த, ஐ.ஓ.சி., எச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் வசம் உள்ளன. தனியார் துறையில், ஆர்.ஐ.எல்., ராயல் டச்சு ஷெல், ரோஸ்நெப்ட் ஆகியவை, பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|