பதிவு செய்த நாள்
20 அக்2017
00:21
புதுடில்லி: நுகர்வோர் பொருட்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவற்றுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை, மத்திய அரசு கடுமையாக்கி உள்ளது.இதனால், இவ்வகை பொருட்களை குறைந்த தரத்தில் தயாரித்து, மலிவு விலையில், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வரும் சீனாவுக்கு, பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சீனாவின் மலிவு விலை பொருட்கள் இறக்குமதி குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
பொம்மைகள், மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள், உணவு பதப்படுத்தும் சாதனங்கள், கட்டுமான பொருட்கள், ரசாயனங்கள் ஆகியவற்றுக்கு, புதிய தரக் கட்டுப்பாட்டு விதிகள் அறிமுகமாகி உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு தயாரிப்புகள், இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு காரணமாக, இவ்வகை பொருட்களை, அதிகளவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா, நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், இந்தியா – சீனா பரஸ்பர வர்த்தகம், 7,145 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, 1999 – 2000ல், 183 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|