பதிவு செய்த நாள்
20 அக்2017
23:46
புதுடில்லி : ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், ஒரே நாளில், மூன்று லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, உலக சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனையில், நிறுவனம், உலக சாதனை படைத்துள்ளது. 17ம் தேதி, ‘தந்தேராஸ்’ தினத்தன்று, மூன்று லட்சத்திற்கும் அதிகமான, இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. உலகிலேயே முதன்முறையாக, ஒரே நாளில், இந்த அளவிற்கு இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
நிறுவனம், செப்டம்பரில், ஏழு லட்சத்திற்கும் அதிகமான, இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வேறு எந்த நிறுவனமும், ஒரே மாதத்தில், இந்த அளவிற்கு இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ததில்லை. இதிலும், ஹீரோ மோட்டோ கார்ப் சாதனை படைத்துள்ளது.
ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், நிறுவனம், 20 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது; இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 11 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|