பதிவு செய்த நாள்
20 அக்2017
23:47
பெங்களூரு : நாட்டில், நுகர்வோரிடம் மிகுந்த நம்பிக்கையை பெற்ற, ‘பிராண்டு’கள் பட்டியலில், ‘கூகுள்’ நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘கோன் அண்டு வோல்பி’ நிறுவனம், இந்திய மக்களின் நன்மதிப்பை பெற்ற பிராண்டுகள் குறித்து, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில், நம்பிக்கைக்கு உரிய, ‘பிராண்டு’களை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நுகர்வோரில், 67 சதவீதம் பேர், உண்மையான செயல்பாடுகளை கொண்ட, நம்பகத்தன்மை அதிகமுள்ள நிறுவனங்களின், பிராண்டு பொருட்களை வாங்கவே விரும்புகின்றனர்.
இந்த வகையில், வலைதள தேடல் பொறியான கூகுள், உண்மையான செயல்பாடுகளுடன், மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட, ‘டாப் – 10’ பிராண்டுகள் பட்டியலில், முதலிடத்தை பிடித்துள்ளது.இதை தொடர்ந்து, ‘மைக்ரோசாப்ட், அமேசான், மாருதி சுசூகி, ஆப்பிள்’ ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆறாவது இடத்தில், சோனி நிறுவனம் உள்ளது. அடுத்த இடங்களில், யு டியூப், பி.எம்.டபிள்யு., மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|