பதிவு செய்த நாள்
20 அக்2017
23:50
ரிபெய்ரா பிரிட்டோ : இந்தியாவில், சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள, ரேணுகா சுகர்ஸ் நிறுவனம், பிரேசிலில் உள்ள, அதன் துணை நிறுவனத்தில் இருந்து, 900 பணியாளர்களை நீக்கி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த, ரேணுகா சுகர்ஸ் நிறுவனம், 2009ல், பிரேசிலைச் சேர்ந்த, இரு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்தி, அவற்றின் நான்கு சர்க்கரை ஆலைகளை நிர்வகித்தது. இத்துடன், குத்தகையில், 1 லட்சம் ஹெக்டேர் பரப்பில், கரும்பு சாகுபடியையும் மேற்கொண்டது. இந்நிலையில், பிரேசிலில், சர்க்கரை மற்றும் எத்தனால் விலை, கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அங்கு, 80க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன.இதனால், ரேணுகா சுகர்ஸ் துணை நிறுவனங்களான, ‘ரேணுகா டு பிரேசில், ரேணுகா வாலே டு இவய்’ ஆகியவையும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, ரேணுகா டு பிரேசில் நிறுவனம், இரு ஆலைகளைச் சேர்ந்த, 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், குத்தகையை செலுத்த இயலாமல், கரும்பு பயிரிட்ட நிலங்களை, உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கிறது. தற்போது, 30 ஆயிரம் ஹெக்டேர் நிலம் மட்டுமே, ரேணுகா குழுமம் வசம் உள்ளது.
உற்பத்தி திறன்:
ரேணுகா டு பிரேசில் நிறுவனத்தின் இரு ஆலைகளும், அவற்றின் உற்பத்தித் திறனில், 50 சதவீத அளவிற்கே செயல்பட்டு வருகின்றன. நடப்பு பருவத்தில், இந்த ஆலைகளின் கரும்பு பிழி திறன், 45 லட்சம் டன் அளவிற்கே உள்ளது. இது, அதன் பிழிதிறனில் பாதி அளவு தான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|