பதிவு செய்த நாள்
22 அக்2017
04:58
ர்டு’ நிறுவனத்தின், எகோ ஸ்போர்ட், எஸ்.யு.வி.,க்கு, இந்தியாவில், எப்போதும் மவுசு உண்டு. அதை பயன்படுத்தி, விற்பனையை பெருக்க, பல்வேறு மாற்றங்களுடன் கூடிய, புதிய எகோ ஸ்போர்ட் வாகனத்தை, போர்டு நிறுவனம் களமிறக்குகிறது. அடுத்த மாதம், அதன் தோற்றத்தை அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது. இப்புதிய மாடலில், முகப்பு பகுதியில், அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், புதிய, ‘டிரேகன் பெட்ரோல் இன்ஜின்’ பொருத்தப்பட்டு உள்ளது. இதன், ‘கிரில்’ அறுங்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ‘ஆங்குலர்’ வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள, முகப்பு விளக்குகள்; புதிய டிசைன், ‘அலாய் டயர்’ என, கவர்ச்சி அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. எனினும், பின்புறத்தில், பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.உட்புறத்தில், நடுப்பகுதியில் உள்ள, ‘கன்சோல்’ புதிதாக வடிவமைக்கப்பட்டு, தொடுதிரை, ‘இன்போடெயின்ட் சிஸ்டம்’ அளவு அதிகரித்துள்ளது. இன்ஜினை பொறுத்தவரை, 120 எச்.பி., சக்தியை உருவாக்கக் கூடிய, 1.5 லி., பெட்ரோல் டிரேகன் இன்ஜின் அறிமுகமாகிறது. 1.5 லி., டீசல் வேரியன்டும் உண்டு. மாருதியின், ‘பிரெஸ்ஸா,’ டாடாவின், ‘நெக்சான்’ ஆகியவற்றின் போட்டிக்கிடையே, இது, 2018 துவக்கத்தில், சந்தைக்கு வரவுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|