பதிவு செய்த நாள்
22 அக்2017
04:58
புதுடில்லி : வட கொரியா உடனான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அணு ஆயுத சோதனை தொடர்பாக, வட கொரியாவுக்கு, ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ளது.அதன் அடிப்படையில், வெளியுறவு வர்த்தக தலைமை இயக்குனரகம், குறிப்பிட்ட பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என,தெரிவித்துள்ளது.இதன்படி, திரவ இயற்கை எரிவாயுக்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றின்ஏற்றுமதிக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.அது போல, வட கொரியாவில்இருந்து, கடல் உணவு, ஜவுளி, ஈயத் தாது ஆகியவற்றை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யக் கூடாது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில ஆண்டுகளாகவே, இந்தியா –வட கொரியா இடையிலான, பரஸ்பர வர்த்தகம் சரிவடைந்து வருகிறது. 2016- – 17ம் நிதியாண்டில், இரு நாடுகள் இடையிலான பரஸ்பர வர்த்தகம், 13.34 கோடி டாலராக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டில்,19.80 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|