பதிவு செய்த நாள்
24 அக்2017
00:31
புதுடில்லி : நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான, ஆறு மாதங்களில், மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 66 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்து உள்ளனர்.
இதன் மூலம், நாட்டில் உள்ள, 42 மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில், பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்தோரின் எண்ணிக்கை, 5.54 கோடியில் இருந்து, 6.20 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு, சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு, முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்களில், சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.
‘வங்கிகளின் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், மியூச்சுவல் பண்டுகளில், சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது’ என, பண்ட்ஸ் இந்தியா டாட் காம் நிறுவனத்தின், மியூச்சுவல் பண்டு ஆய்வு பிரிவு தலைவர், வித்யா பாலா தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|