பதிவு செய்த நாள்
24 அக்2017
00:33
மும்பை : தொலை தொடர்பு சேவையில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கும், பார்தி ஏர்டெல் நிறுவனர், சுனில் மிட்டலுக்கும் கடும் போட்டி நிலவும் சூழலில், நேற்று ஒரே நாளில் இருவரின் சொத்து மதிப்பு, 150 கோடி டாலர் உயர்ந்துள்ளதாக, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், முகேஷ் அம்பானியின் ஆர்ஜியோ நிறுவனம், மொபைல்போன் சேவை கட்டணத்தை அதிகரித்தது. இதன் எதிரொலியாக, நேற்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை, 3 சதவீதம் உயர்ந்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 110 கோடி டாலர் உயர வழி வகுத்தது.
ஆர்ஜியோ கட்டண உயர்வு, பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கும் சாதகமாக உள்ளதால், அதன் பங்கின் விலை, 5 சதவீதம் உயர்ந்து, சுனில் மிட்டலின் சொத்து மதிப்பு, 43.30 கோடி டாலர் உயர துணை புரிந்தது. நேற்று, பார்தி ஏர்டெல் பங்கின் சந்தை மூலதனம், முதன் முறையாக, வர்த்தகத்தின் இடையே, 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, பின் குறைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் சந்தை மூலதனம், 6 லட்சம் கோடி ரூபாயை எட்ட, இன்னும், 5,921 கோடி ரூபாய் தேவை என்ற நிலையில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|