வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ் : ஏர்டெல் அறிவிப்புவாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ் : ஏர்டெல் அறிவிப்பு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 உயர்வு மாலை நேர நிலவரம், தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 உயர்வு ...
இந்தியாவில் 5ஜி: எரிக்சனுடன் இணையும் பாரதி ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2017
15:50

புதுடில்லி : ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டெலிகாம் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்சன் இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தகளின் படி இந்தியாவில் ஏர்டெல் 5ஜி சேவைகளை வழங்க இருக்கிறது.

இந்தியாவில் ஏர்டெல் போன்றே உலகம் முழுக்க 36 நிறுவனங்களுடன் எரிக்சன் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளதாக எரிக்சன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா, ஓசியானா மற்றும் இந்திய பிரிவு மூத்த துணை தலைவர் நுன்சினோ மிர்டிலோ தெரிவித்துள்ளார். எனினும் இரு நிறுவனங்களிடையேயான ஒப்பந்தத்தின் நிதிநிலை சார்ந்த தகவல்களை வழங்கவில்லை. புதிய ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த தலைமுறை 5ஜி நெட்வொர்க் வழங்க ஏதுவாக ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட இருக்கின்றன. ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் இதர சேவைகளை எரிக்சன் நிறுவனம் வழங்கி வந்துள்ளது.

முன்னதாக எரிக்சன் சார்பில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான முழுமையான செயல் விளக்கம் அந்நிறுவனத்தின் 5ஜி சோதனை தளத்தை பயன்படுத்தி விவரிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பமானது அதிவேக சேவையை சீராக வழங்கும் என எரிக்சன் தெரிவித்தது. மேலும் எரிக்சன் இந்திய சந்தைக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் 2020-ம் ஆண்டில் வழங்கப்பட இருந்தாலும், 5ஜி தொழில்நுட்பத்திற்கான செயல் விளக்கம் நாட்டின் வலுவான 4ஜி சுற்றுச்சூழலை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என மிர்டிலோ தெரிவித்தார்.

அதிவேக டேட்டா வழங்கும் 5ஜி தொழில்நுட்பம் 2026-ம் ஆண்டில் ரூ.1,77,489 கோடி வருவாயை இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு ஈட்ட வாய்ப்புகள் இருப்பதாக எரிக்சன் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)