பதிவு செய்த நாள்
20 நவ2017
03:52
கடந்த வார ஆரம்ப நாட்களில், கச்சா எண்ணெய் விலை சரிந்து, வர்த்தகம் நடந்தது. எனினும், வார இறுதி நாளான வெள்ளியன்று, 2 சதவீதம் அதிகரித்து, ஒரு பேரல், 56.81 டாலர் என்ற நிலையில், வியாபாரம் முடிவடைந்தது. இதற்கு, முந்தைய வார உச்சம், 57.90 டாலர் ஆகும். இதிலிருந்து, 54.82 டாலர் வரை சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.‘ஒபெக்’ எண்ணெய் வினியோகம் தடைபடும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, திடீர் விலை உயர்வு நேர்ந்தது. சர்வதேச எரிபொருள் நிறுவனமான, ஐ.இ.ஏ., நிலவரப்படி, அக்டோபரில், ஒபெக் எண்ணெய் உற்பத்தி, தினசரி, 80 ஆயிரம் பேரல்கள் குறைந்து, 32.53 மில்லியன் பேரல்கள் ஆனது. அல்ஜீரியா, ஈராக் மற்றும் நைஜீரியா நாடுகளின் உற்பத்தி குறைந்ததே, இதற்கு காரணமாகும்.உற்பத்தி குறைப்பு நடவடிக்கையானது, அக்டோபரில் தான், 96 சதவீதம் அளவுக்கு கடைப்பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஓ.இ.சி.டி., எனப்படும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாடுகளின் வியாபார இருப்பு, 40 மில்லியன் பேரல்களாக, செப்டம்பரில் குறைந்திருந்தது.மேலும், உலக மொத்த எண்ணெய் இருப்பு அளவானது, 63 மில்லியன் பேரல்களாக குறைந்தது. இது, 2014க்கு பின் ஏற்பட்ட காலாண்டு குறைவாகும்.வளைகுடா நாடுகள், தங்கள் உற்பத்தியை குறைத்து, விலை ஏற்ற முடிவு செய்து, அதை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், 30ல், ஒபெக் உறுப்பு நாடுகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், முந்தைய ஒப்பந்தப்படி, 2018 மார்ச் உடன், உற்பத்தி குறைப்பு முடிவடைகிறது.இதை மீண்டும், 9 மாதம், அதாவது, டிச., வரை நீட்டிக்க, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா முன்னுக்கு வந்ததும், அது விலை ஏறக் காரணமாகியது. இருப்பினும், பெருகி வரும் அமெரிக்க எண்ணெய் உற்பத்தி, இதற்கு சவாலாக இருக்கிறது.இந்நிலையில், எண்ணெய் விலையை பொறுத்தவரை, 60 டாலர் என்பது, நல்ல ரெசிஸ்டென்ட் ஆகும். வரும் நாட்களில், 55 –- 60 டாலர் என்ற நிலையில், வர்த்தகம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|