பதிவு செய்த நாள்
21 நவ2017
03:20
டேராடூன் : டில்லி தலைநகர் பிராந்தியத்தில், குருகிராமைச் சேர்ந்த, ‘ஆம்பர் என்டர்பிரைசஸ்’ நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில், ‘கோத்ரெஜ், வோல்டாஸ்’ உட்பட, பல நிறுவனங்களுக்கு, ‘ஏசி, வாஷிங் மெஷின்’ மற்றும், ‘ரெப்ரிஜிரேட்டர்’ உதிரிபாகங்களை தயாரித்து அளித்து வருகிறது.நாட்டில், ஏழு இடங்களில், 10 தொழிற்சாலைகளை கொண்ட இந்நிறுவனத்திற்கு, 415 கோடி ரூபாய் கடன் உள்ளது.இக்கடனை திரும்பச்செலுத்தவும், நிர்வாக நடைமுறைகளுக்கு தேவையான நிதியை திரட்டவும், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.‘‘இதற்கான விண்ணப்பம், தற்போது, ‘செபி’யின் பரிசீலனையில் உள்ளது. இம்மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில், பங்கு விற்பனைக்கு அனுமதி கிடைக்கும்,’’ என, ஆம்பர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தல்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 555 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. அதில், 345 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்துவதற்கு பயன்படுத்தும் எனத் தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|