பதிவு செய்த நாள்
21 நவ2017
03:36
மும்பை : ‘‘ரிலையன்ஸ், பிர்லா குழுமங்கள், எல் அண்டு டி.,யை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது,’’ என, எல் அண்டு டி., நிறுவனத்தின் செயல் சாரா தலைவர், ஏ.எம்.நாயக் தெரிவித்துள்ளார்.சாதாரண இளநிலை பொறியாளராக, 1965ல் எல் அண்டு டி.,யில் சேர்ந்த நாயக், அதன் தலைவர் பொறுப்பில் இருந்து, செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.இவரின், ‘தி நேஷனலிஸ்ட்’ என்ற வாழ்க்கை வரலாற்று நுால் வெளியீட்டு விழா, டில்லியில் நடைபெற்றது.அதில், ஏ.எம்.நாயக் பேசியதாவது:எல் அண்டு டி.,யில் குறிப்பிடத்தக்க பங்கை, 1987ல் வாங்கிய, ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர், திருபாய் அம்பானி, 1989ல் திடீரென்று பல நிதி நிறுவனங்களுடன் இணைந்து, முழுமையாக கையகப்படுத்த முயற்சித்தார். அச்சமயத்தில், பார்லிமென்ட் தேர்தலில், காங்., தோல்வியடைந்ததால், அம்முயற்சி பலிக்கவில்லை.இதையடுத்து, 2001ல் நான் சிகாகோவில் இருந்தபோது, எல் அண்டு டி., சிமென்ட் பிரிவின் தலைவர், மோகன் கர்னானி எனக்கு போன் செய்து, ‘நம் நிறுவனம் பிர்லாவிடம் போய்விட்டது’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்தில், ரிலையன்ஸ் நிர்வாக இயக்குனராக இருந்த அனில் அம்பானி, ‘நீங்கள் எங்களை விரும்பவில்லை. அதனால், அனைத்து பங்குகளையும் குமாரமங்கலம் பிர்லாவுக்கு தந்து விட்டோம்’ என்றார்.உடனடியாக இந்தியாவந்த நான், எல் அண்டு டி., தொழிலாளர் நல அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் பிர்லாவின் பங்குகளையும்வாங்கி, சிமென்ட் பிரிவை தனியே பிரித்து, பிர்லாவிற்கு அளித்தேன்.இதனால், பொறியியல், தயாரிப்பு மற்றும் திட்ட வடிவமைப்பு என்ற மூன்று பிரிவுகளில், தன்னிகரற்ற நிறுவனமாக, எல் அண்டு டி., உருவெடுத்தது. எல் அண்டு டி.,யை அதன் தொழிலாளர்களுக்கு சொந்தமாக்கினேன்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|