பதிவு செய்த நாள்
22 நவ2017
23:54
புதுடில்லி : அரசு நிதியுதவி திட்டங்கள் பல இருந்தும், 10ல், 8 பெண் தொழில் முனைவோர்கள், சுய நிதியுதவி மூலம் வர்த்தகம் புரிவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, வலைதள நிறுவனமான, ‘ஷீட் ஒர்க்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து, தொழில் முனைவோருக்கு பல்வேறு நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவை குறித்து, பெண் தொழில் முனைவோர்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், பயன் பெற முடியவில்லை. இதனால், 80 சதவீத பெண் தொழில் முனைவோர்கள், சுய நிதியில் வர்த்தகம் புரிகின்றனர். கோவா, ஜம்மு – காஷ்மீர், கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய, ஐந்து மாநிலங்களில், பெண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்கள் அதிகம் உள்ளன.
தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களில், பெண்கள் அதிகம் உள்ளனர். மொத்த பெண் தொழில்முனைவோரில், அருணாச்சல பிரதேசம், மேகாலயா மற்றும் நாகலாந்தின் பங்கு குறைவாக உள்ள போதிலும், இம்மாநிலங்களில், ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண் தொழில் முனைவோர் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|