நேரடி விற்பனை விதிகள்: சிக்கிம், சத்தீஸ்கர் ஏற்புநேரடி விற்பனை விதிகள்: சிக்கிம், சத்தீஸ்கர் ஏற்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.80 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.80 ...
நிதி சாரா நிறுவனங்கள் கடன் தகுதி உயரும்; பொருளாதார வளர்ச்சி விறுவிறுப்படையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2017
23:57

மும்பை : ‘இந்­தி­யா­வில், 2018ல், நிதி சாரா நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மேம்­படும்; நாட்­டின் பொரு­ளா­தா­ரம் மந்த நிலை­யில் இருந்து மீளும்’ என, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ தெரி­வித்து உள்­ளது.


கடந்த வாரம், இந்­தி­யா­வின் கடன் தகுதி மதிப்பை, 13 ஆண்­டு­க­ளுக்கு பின், சாத­க­மான பிரி­வில் இருந்து, ஒரு நிலை உயர்த்தி, ஸ்தி­ர­மான பிரி­வில் சேர்த்த, ‘மூடிஸ்’ தற்­போது, ‘நிதி சாரா நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மேம்­படும்’ எனக் கூறி­யி­ருப்­பது, குறிப்­பி­டத்­தக்­கது.


இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, அடுத்த, 12 – 18 மாதங்­களில், 7.6 சத­வீ­த­மாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இத­னால், பொருட்­களின் விற்­பனை உய­ரும்; நிறு­வ­னங்­களின் உற்­பத்­தித் திறன் அதி­க­ரிக்­கும்; மூலப்­பொ­ருட்­கள் விலை மித­மான அள­வில் இருக்­கும். இத்­த­கைய கார­ணங்­க­ளால், மதிப்­பீட்டு காலத்­தில், நிதி சாரா நிறு­வ­னங்­களின், வரிக்கு முந்­தைய வரு­வாய் வளர்ச்சி, 5 – 6 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும்.


பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள், அவற்­றின் நிதி தேவை­களை, ரொக்க கையி­ருப்பு மற்­றும் பங்­குச் சந்­தை­கள் வாயி­லாக பூர்த்தி செய்து கொள்­ளும். அடுத்த மூன்று ஆண்­டு­களில், கடன் பத்­தி­ரங்­களின் முதிர்ச்­சியை சமா­ளிக்­கக் கூடிய அள­விற்கு, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் ஆற்­றல் அதி­க­ரிக்­கும். ஜி.எஸ்.டி., உள்­ளிட்ட சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களும், மூலப்­பொ­ருட்­களின் மித­மான விலை நில­வ­ர­மும், நிறு­வ­னங்­களின் செயல்­பாட்டு லாபத்தை அதி­க­ரிக்க
உத­வும். இத­னால், நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்பு உய­ரும்.


இது­த­விர, நிறு­வ­னங்­களின் சொத்து மதிப்­பும் உய­ரும் என்­ப­தால், அவற்­றின் ஒட்­டு­மொத்த கடன் தகுதி மதிப்பு அதி­க­ரிக்­கும். அதே சம­யம், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 6 சத­வீ­தத்­திற்­கும் கீழாக வீழ்ச்சி கண்­டாலோ அல்­லது விளை பொருட்­கள் விலை சரி­வ­டைந்­தாலோ, நிதி சாரா நிறு­வ­னங்­களின் வரிக்கு முந்­தைய வரு­வாய் வளர்ச்சி குறைய வாய்ப்­புள்­ளது. மேலும், மத்­திய அர­சின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை செயல்­பாட்­டிற்கு கொண்டு வரு­வ­தில் உண்­டா­கும் தாம­தம்; ஸ்தி­ர­மற்ற அர­சி­யல் சூழல்; வட்டி உயர்வு; பண­வீக்­கம் அதி­க­ரிப்பு; டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பில் அதிக ஏற்ற, இறக்­கம் போன்­றவை நிகழ்ந்­தால், நிறு­வ­னங்­களின் வளர்ச்சி தடை­படும். அவற்­றின் கடன் தகுதி மதிப்பு குறை­யும் ஆபத்­தும் உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.


லாப வரம்பில் தாக்கம்:

எண்­ணெய், ரியல் எஸ்­டேட், வாக­னம், வாகன உதிரி பாகங்­கள், தக­வல் தொழில்­நுட்ப சேவை­கள் ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்பு, சாத­க­மான நிலை­யில் இருக்­கும். தொலை தொடர்பு துறை­யில் நில­வும் கடும் போட்டி, அடுத்த, 12 மாதங்­களில், முன்­னணி நிறு­வ­னங்­களின் வரு­வாய் மற்­றும் லாப வரம்­பில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)