பதிவு செய்த நாள்
24 நவ2017
00:06
புதுடில்லி : தென் கொரியாவைச் சேர்ந்த, லோட்டே மற்றும் பிரான்சைச் சேர்ந்த, பியூஜியாட் குழுமங்கள், இந்தியாவில், 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளன.
தென் கொரியாவின், லோட்டே குழுமம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 ஆயிரம் – 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்நிறுவனம், ரயில்வே நிலைய பராமரிப்பு, ரியல் எஸ்டேட், உணவு பதப்படுத்துதல், ரசாயனம், சில்லரை விற்பனை ஆகியவற்றில், முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. லோட்டே இந்தியா நிறுவனம், ஏற்கனவே, ‘பூப்ரூ, எக்ளர்ஸ், லேக்டோ கிங், சாக்கோ பை’ உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
பிரான்சைச் சேர்ந்த, பியூஜியாட் குழுமம், புகழ் பெற்ற, ‘பியூஜியாட், சிட்ரன்’ கார்களை தயாரிக்கிறது. இந்நிறுவனம், சில ஆண்டுகளாகவே, இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைப்பதில் ஆர்வம் காட்டியது. இந்நிறுவனம், சி.கே.பிர்லா குழுமத்துடன் இணைந்து, தென்னிந்தியாவில், கார் தொழிற்சாலை மற்றும் இன்ஜின் தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளது. இதற்காக, முதற்கட்டமாக, 7,800 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|