பதிவு செய்த நாள்
24 நவ2017
23:51
புதுடில்லி : ‘இந்தியாவின் கடன் தகுதி மதிப்பில் மாற்றமில்லை’ என, தர மதிப்பீட்டு நிறுவமான, எஸ் அண்டு பி தெரிவித்து உள்ளது.
சமீபத்தில், ‘மூடிஸ்’ நிறுவனம், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை உயர்த்திய நிலையில், அதற்கு மாறான நிலையை, எஸ் அண்டு பி நிறுவனம் எடுத்திருப்பது, வியப்பை ஏற்படுத்தி உள்ளது.எனினும் இந்நிறுவனம், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சீர்திருத்த திட்டங்களை பாராட்டி உள்ளது.
இந்நிறுவனம், 2007ல், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை, ஸ்திரமானது எனக் கூறி, குறைந்த முதலீட்டுக்கு உகந்த நாடுகளுக்கான, ‘பி.பி.பி., மைனஸ்’ பிரிவில் சேர்த்தது. இதையடுத்து, 2009, 2010ல் மதிப்பீடு மாற்றப்பட்டது. 2012ல், முதலீட்டிற்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ள பிரிவில் சேர்த்தது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் அமைந்ததும், பி.பி.பி., மைனஸ் பிரிவிற்கு உயர்த்தியது. தற்போது, இப்பிரிவில் எந்த மாற்றமும் இல்லை என, எஸ் அண்டு பி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|