பதிவு செய்த நாள்
24 நவ2017
23:52
புதுடில்லி : ஐ.டி., நிறுவனங்களிடம், 10 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பத்தரக் கோரி, மத்திய வரித்துறை, ‘நோட்டீஸ்’ விடுத்த விவகாரத்தில், சுமுக தீர்வு காணும் நடவடிக்கையில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் அனுப்பும் மின்னஞ்சல் விபரப்படி, சாப்ட்வேர்களை மேம்படுத்தி தருவதால், அது, சேவையாக கருதப்படும் என, வரித்துறை தெரிவித்து உள்ளது. இதையடுத்து, 200 ஐ.டி., – ஐ.டி.இ.எஸ்., நிறுவனங்கள் பெற்ற, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வரிச்சலுகையை, திரும்ப தர வேண்டும் என, மத்திய வரித் துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவனங்கள், மத்திய அரசை அணுகின. இதையடுத்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம், துணை கமிஷனர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், சேவை எங்கு வழங்கப்பட்டது என்பதையும், இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்தும் அறிக்கை தருமாறு கோரப்பட்டு உள்ளது. அதன்படி, இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|