அடுத்து வரும் மாதங்களில்...  சிமென்ட் தேவை சூடுபிடிக்கும் நிறுவனங்களின் லாபம் குறையும்அடுத்து வரும் மாதங்களில்... சிமென்ட் தேவை சூடுபிடிக்கும் நிறுவனங்களின் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ...
ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2017
10:50

புதுடில்லி : இதுவரை மொபைல் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்காத வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ம் தேதி முதல் மொபைல்போன் பயன்படுத்துவோர் ஓடிபி (OTP) மூலம் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கலாம். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதே சமயம், மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 6 ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனால் கால கெடு முடிந்த பிறகு மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்காத வாடிக்கையாளர்களின் சிரமங்களை தவிர்க்கவும், கடைசி நேர குழப்பங்களை தவிர்க்கவும் ஓடிபி மூலம் இணைக்கும் வசதியை செய்து வர அரசு முடிவு செய்துள்ளது. மொபைல் கம்பெனிகளில் சில சமயங்களில் பயோ மெட்ரிக் இயந்திரம் வேலை செய்யாமல் இருக்கலாம். மொபைல் சேவை மையங்கள் தூரமாக இருக்கலாம். இது போன்ற மக்களின் சிரமங்களை தவிர்க்க இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓடிபி முறையில், வாடிக்கையாளர்கள் ஐவிஆர்எஸ் (Interactive Voice Response System -IVRS)க்கு தங்கள் மொபைலில் இருந்து கால் செய்ய வேண்டும். அதில் ஆங்கிலம், இந்தி அல்லது பிராந்திய மொழிகளை தேர்வு செய்து, ஆதார் நம்பர் இணைப்பதற்கான எண்ணை அழுத்த வேண்டும். உடனடியாக வாடிக்கையாளரிடம் ஆதார் எண் கேட்கப்படும். பின்னர் மொபைலுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபி.,யை பதிவு செய்த உடன், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களின் மொபைல் எண் சரிபார்க்கப்பட்டு, ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)