பதிவு செய்த நாள்
09 டிச2017
23:58
டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், முதன்முறையாக தயாரித்துள்ள, 'சூப்பர் பிரீமியம்' ரகத்தைச் சேர்ந்த, 'அப்பாச்சி, ஆர்.ஆர்., 310' பைக் அறிமுகமாகி உள்ளது. பி.எம்.டபிள்யு., நிறுவனத்துடன் இணைந்து, இந்த பைக் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் அறிமுக நிகழ்ச்சியில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் தலைவர், ராதாகிருஷ்ணன், இணை மேலாண் இயக்குனர், சுதர்ஷன் வேணு ஆகியோர் கூறியதாவது:
டில்லியில், 2016ல் நடைபெற்ற ஆட்டோ ஷோவில், இந்த பைக்கை காட்சிப்படுத்தினோம். இரு ஆண்டு கடின உழைப்புக்கு பின், தற்போது, வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்கிறோம். அப்பாச்சி, ஆர்.டி.ஆர்., 150ல் துவங்கிய, 'பிரீமியம்' பைக் உற்பத்தி, 180 சிசி, 200 சிசி எனத் தொடர்ந்து, தற்போது, 310 சிசி, 'சூப்பர் பிரீமியம்' பைக் வரை உயர்ந்து உள்ளோம். ரேசிங் களத்தில், 35 ஆண்டுகள் கற்ற பாடங்களை, நவீன தொழில்நுட்பத்துடன் சரியான விகிதத்தில் இணைத்து, இதை தமிழகத்தில், 'மேக் இன் இந்தியா' அடிப்படையில் உருவாக்கி உள்ளோம்.
இதில், 312 சிசி 'சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்விட்கூல்டு இன்ஜின்' பொருத்தப்பட்டு உள்ளது. ஆறு கியர் உடைய இந்த பைக், அதிகபட்சம், 160 கி.மீ., வேகத்தில் செல்லும். புறப்பட்ட, 2.9 வினாடிகளில், 60 கி.மீ., வேகத்தை எட்டும். மேலும், ஏ.பி.எஸ்., பிரேக் வசதி; வேகத்திற்கு உதவும் இலகு சேசிஸ்; மிச்செலின் டயர்கள் என, ரேசிங்குக்கு உகந்த அம்சங்கள் ஏராளம். இதன், ஷோரூம் துவக்க விலை, 2.05 லட்சம் ரூபாய். சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்களில் வந்துள்ள இந்த பைக், இம்மாத இறுதியில் இருந்து கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|