மொத்தவிலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்வுமொத்தவிலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்வு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ...
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாட்டின் முதல் நீர்விமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
12:55

புதுடில்லி : நாட்டின் முதல் நீர் விமானம் மும்பையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. நீரிலும், ஆகாயத்திலும் இயங்கக் கூடிய இந்த சிறிய ரக விமானம், 12 பேர் வரை பயணம் செல்ல கூடியதாகும்.

சோதனை இயக்கத்தின் போது கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் கட்காரி, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் ராஜூ ஆகியோர் பயணம் செய்தனர். பின்னர் சபர்மதி ஆற்றில் சுமார் 180 கி.மீ., தொலைவில் நடந்த வெள்ளோட்டத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

இது போன்று நீர் விமானங்கள் கனடா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மட்டுமே உள்ளது. ரூ.12 முதல் 13 கோடி தொகை கொண்ட இந்த நீர்விமானம் விரைவில் நாட்டின் 111 நதிகளில் உள்ள வழித்தடங்களிலும் இயக்கப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகள், சிறு வணிகர்கள் பலருக்கும் இது உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஜப்பானின் சிடோச்சி நிறுவனத்திடம் இருந்து இது போன்ற 100 க்கும் மேற்பட்ட கோடியாக் நீர்விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஓராண்டிற்குள் இந்த நீர்விமானங்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நீர்விமானங்கள், விமானநிலையங்கள் இல்லாத புறநகர் பகுதிகளுக்கும் நீர்வழி பயணம் மேற்கொள்ள உதவிகரமாக அமையும் என கூறப்படுகிறது. மும்பை போன்ற பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இவை உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மும்பையை தொடர்ந்து யமுனை, கங்கை நதிகளிலும் இந்த நீர் விமானத்தை சோதிக்க சிடோச்சி நிறுவனத்திற்கு கட்காசி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவின் நாக்பூரில் இந்த நீர்விமானங்களின் உற்பத்தியை துவக்க வருமாறு சிடோச்சி நிறுவனத்திற்கு கட்காரி அழைப்ப விடுத்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)