கூகுளுக்கு போட்டியாக மைக்ரேசாப்ட்டின் தேடு பொறிகூகுளுக்கு போட்டியாக மைக்ரேசாப்ட்டின் தேடு பொறி ... பணமதிப்பிழப்பால் இந்தியா பயனடைந்துள்ளது : சர்வதேச நிதியம் பணமதிப்பிழப்பால் இந்தியா பயனடைந்துள்ளது : சர்வதேச நிதியம் ...
அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2017
13:29

புதுடில்லி : மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 ம் ஆண்ட மார்ச் 31 வரை நீட்டிப்பதற்கான அரசாணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இந்நிலையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலனை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இடைக்கால உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தையும் மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 வரை நீட்டிக்க வேண்டும். அதற்குள் ஆதார் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ச் 31 வரை ஆதார் எண்ணை அரசு திட்டங்களுடன் இணைக்காதவர்களுக்கும் திட்ட பலன்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, ஆதார் எண் இணைப்பதை எதிர்த்த பிற வழக்குகளின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 17 க்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)