அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்புஅரசு திட்டங்களுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு ... மொபைல் போன், டிவி.,க்கான சுங்க வரி உயர்வு மொபைல் போன், டிவி.,க்கான சுங்க வரி உயர்வு ...
பணமதிப்பிழப்பால் இந்தியா பயனடைந்துள்ளது : சர்வதேச நிதியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2017
13:57

வாஷிங்டன் : கடந்த ஆண்டு கொண்ட வரப்பட்ட உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியா பயனடைந்துள்ளது என சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.

ஐஎம்எப்.,ன் வில்லியம் முர்ரே, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாராட்ட தகுந்த நன்மைகள் ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். இன்னும் பல நன்மைகள் இதனால் ஏற்படவும் சாத்தியமுள்ளது.

பணமதிப்பிழப்பு, துவக்கத்தில் பொருளாதார ரீதியாக சில தற்காலிக பிரச்னைகளை ஏற்பட்டது. சில்லறை மற்றும் பண பற்றாக்குறையால் தனியார் நிறுவனங்கள், சிறு தொழில்கள் சில இன்னல்களை எதிர்கொண்டன. ஆனால் அதனால் கிடைத்துள்ள பலன்கள், இன்னல்களை சிதறடித்து விட்டன.

நடப்பு ஆண்டின் துவக்கத்தில் சில பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், மத்தியில் நல்ல பலனை ஏற்படுத்த துவங்கியது. பொருளாதார செயல்பாடுகள், வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் மிகப் பெரிய ஒழுங்குமுறையை இது ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி கவலை அளிப்பதாக உள்ளதாக ஜனவரி மாதத்தில் ஐஎம்எப் குறிப்பிட்டிருந்தது. தற்போது பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் பலனடைந்துள்ளதாக பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)