பதிவு செய்த நாள்
15 டிச2017
23:55
புதுடில்லி:‘மத்திய
அரசின், எப்.ஆர்.டி.ஐ., மசோதாவில், வங்கி வாடிக்கையாளர்களின்
டிபாசிட்டிற்கு, முழு பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் இடம் பெற
வேண்டும்’ என, ‘அசோசெம்’ செகரட்டரி ஜெனரல், டி.எஸ்.ராவத்
வலியுறுத்தி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
எப்.ஆர்.டி.ஐ.,
எனப்படும், நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு மசோதாவில்,
‘பெயில் இன்’ என்ற அம்சம், வங்கி டிபாசிட்தாரர்கள், வங்கியில் கடன்
பெற்றோர், வங்கியின் பங்கு முதலீட்டாளர்கள் என, அனைவரையும்
உள்ளடக்கியதாக உள்ளது. அதில், வங்கி திவாலானால்,
டிபாசிட்டிற்கு நிகரான கடன் பத்திரங்கள், வங்கி பங்குகளை போல
வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அம்சம், வங்கி
டிபாசிட்தாரர்கள் இடையே சந்தேகத்தையும், பீதியையும் கிளப்பி
உள்ளது. டிபாசிட் செய்த பணம், திரும்பக் கிடைக்காதோ என்ற அச்சத்தை
ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள்,
ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கு, வங்கி
டிபாசிட் தவிர, வேறு எந்தவித சமூக பாதுகாப்பும் இல்லை. ஆகவே, டிபாசிட்தாரர்களின் நலனை பாதுகாக்கும் அம்சத்தை, மசோதாவில் தெளிவுபடுத்த வேண்டும்.இல்லையென்றால், மக்கள், தங்கள் சேமிப்பு பறிபோய்விடும் என்ற அச்சம் காரணமாக, வங்கி துறை மீதான நம்பிக்கையை இழந்து விடுவர்.
தங்கம்,
நகைகள், ரியல் எஸ்டேட் என, உற்பத்தி சாரா துறைகளில், அவர்களின்
சேமிப்பு முடங்கும். அமைப்பு சாரா நிதிச் சந்தையில், கவர்ச்சிகரமான
அறிவிப்புகள் மூலம் ஏமாற்றும் நிறுவனங்களில், முதலீடு செய்ய
நேரிடும்.ஆகவே, எந்த விலை கொடுத்தாவது, வங்கி
டிபாசிட்தாரர்களின் சேமிப்புக்கு, முழு உத்தரவாதம் கொடுக்கும்
அம்சத்தை, மசோதாவில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|