பதிவு செய்த நாள்
17 டிச2017
23:57
வங்கிக் கணக்கை துவக்குவது, வருமான வரி செலுத்துவது உட்பட, ‘பான்’ கார்டு அவசியம். ‘பான்’ கார்டு அடையாள அட்டையாகவும் பயன்படுகிறது.
‘பான்’ கார்டு எதிர்பாராதவிதமாக தொலைந்து விட்டால், என்ன செய்வது?
‘பான்’ கார்டு என்பது, உண்மையில், எண்கள் மற்றும் எழுத்துக்களை கொண்ட வரிசை தான். கார்டு தொலைந்து விட்டாலும், அந்த அடையாளம் உங்களுடையதாகவே நீடிக்கும். எனவே, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே உள்ள, ‘பான்’ கார்டு எண்ணுக்கு, ‘ரீ பிரின்ட்’ கோரினால் போதுமானது. அதாவது, அதே எண்ணில் புதிய கார்டு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ‘பான்’ கார்டு தொலைந்திருக்கும் பட்சத்தில், முதலில், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். ‘பான்’ கார்டு தவறுதலாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, இது அவசியம்.
‘பான்’ கார்டு பெற, என்.எஸ்.டி.எல்., மற்றும், யு.டி.ஐ.ஐ.டி.எஸ்.எல்., ஆகிய நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதே நிறுவன இணையதளம் மூலம், ‘பான்’ கார்டு, ‘ரீ பிரின்ட்’ பெறவும் விண்ணப்பிக்கலாம். ‘ரீ பிரின்ட்’ அல்லது திருத்தங்கள் பகுதியை தேர்வு செய்து, அதில் அடிப்படை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்தகட்டமாக, ‘ஆதார்’ விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, ஆதார் சார்ந்த, கே.ஒய்.சி., முறையை தேர்வு செய்யலாம் அல்லது ஆவணங்களை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். கே.ஒய்.சி., முறையை தேர்வு செய்தால், ஆதார் பட்டியலில் உள்ள முகவரிக்கு கார்டு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|