பதிவு செய்த நாள்
18 டிச2017
10:49
மும்பை : குஜராத் மற்றும் ஹமாச்சல் பிரதேசம் தேர்தல், ஓட்டு எண்ணிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் கடுமையாக சரிந்தன. பின்னர் எழுச்சி கண்டன.
குஜராத் மற்றும் ஹமாச்சல் பிரதேசம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய ஒருமணிநேரத்தில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஒருக்கட்டத்தில் காங்கிரஸ் பா.ஜ., விட முன்னிலை பெற்றது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும் போது இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன.
வர்த்தகநேர துவக்கத்தில்(9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 867.34 புள்ளிகள் சரிந்து 32,595.63-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 258.45 புள்ளிகள் சரிந்து 10,074.80-ஆக வர்த்தகமாகின.
இருப்பினும் மீண்டும் பா.ஜ., முன்னிலை பெற்றதோடு குஜராத் மாற்றும் ஹிமாச்சல் இரண்டிலும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதன்காரணமாக சரிந்த பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டன. காலை 10.45 மணியளவில், சென்செக்ஸ் 192.40 புள்ளிகள் உயர்ந்து 33,655.37-ஆகவும், நிப்டி 63.80 புள்ளிகள் உயர்ந்து 10,397.05-ஆகவும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|