பதிவு செய்த நாள்
19 டிச2017
00:31
மும்பை : நாட்டின், பால் மற்றும் பால் பொருட்கள் சந்தை, 2020க்குள், 9.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ஆய்வு நிறுவனமான, ‘எடெல்வைஸ் செக்யூரிட்டிஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தை மதிப்பு, 2010 – 16 வரையிலான காலத்தில், 15 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன், 5.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பல நிறுவனங்கள், இத்துறையில் களமிறங்கி வருகின்றன.
இதனால் இத்துறை, இதே வளர்ச்சி விகிதத்தை பின்பற்றினால், 2020க்குள், 9.4 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு உடையதாக உருவெடுக்கும். மேலும், மிகப்பெரிய அளவில், பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நாடு என்ற சிறப்பை, இந்தியா பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின், தேசிய பால் பண்ணை திட்டமும், உள்நாட்டு பால் உற்பத்தியில், தனியார் முதலீடுகளும், பால் உற்பத்தியை அதிகரிக்க துணை புரிந்துள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில், ஐரோப்பிய கூட்டமைப்பு, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பால் உற்பத்தி வளர்ச்சி , 2 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட மிகக் குறைவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|