பதிவு செய்த நாள்
19 டிச2017
00:34
புதுடில்லி : வணிக நிறுவனங்கள், மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, ஜி.எஸ்.டி.என்., அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: முந்தைய நிதியாண்டு அல்லது நடப்பு நிதியாண்டில், 1.50 கோடி ரூபாய் வரை, விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படிவத்தின் கீழ், அவற்றின், ஜி.எஸ்.டி., கணக்கு விபரங்களை, காலாண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்யலாம். அது போல, ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படிவத்தின் கீழ், மாதாந்திர விற்பனை, வரி உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய விருப்பம் தெரிவித்தோர், ஆக., – நவ., வரையிலான கணக்கை தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு கணக்கு தாக்கல் செய்யும் போது, முந்தைய மாதத்தின் கணக்கை, கண்டிப்பாக தாக்கல் செய்திருக்க வேண்டும். நிறுவனங்கள், மேற்கண்ட இரு முறைகளில், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்வதற்கு, 23வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|