பதிவு செய்த நாள்
07 ஜன2018
03:45
ஹோண்டா கார்ஸ் நிறுவனம், 2013ல், ‘அமேஸ்’ எனும், ‘செடான்’ ரக காரை அறிமுகம்
செய்தது. அது அறிமுகமானதில் இருந்து, விற்பனை சீராக அதிகரித்தது. இந்தியாவில், எஸ்.யு.வி., மோகம் அதிகரித்து வரும் போதிலும், இதன் விற்பனையில் தொய்வு ஏற்படவில்லை. சில ஆயிரங்கள் மட்டுமே குறைந்தது. இதுவரை, 2.5 லட்சம் கார்கள்
விற்பனையாகி உள்ளன.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் கழித்து, சில மாறுதல்களை செய்து, அதில் புதிய மாடலை, ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த மாதம், டில்லியில் நடக்க உள்ள, ‘ஆட்டோமொபைல் எக்ஸ்போ’ கண்காட்சியில், இந்த புதிய, ‘அமேஸ்’ அறிமுகமாக உள்ளது. புதியதில், ‘ஹோண்டா சிட்டி’ காரில் உள்ள, சில அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதில், 100 எச்.பி., திறன் உற்பத்தி செய்யும், 1.2 லி., பெட்ரோல் மற்றும் 1.5 லி., டீசல் இன்ஜின் பொருத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை, ‘மேனுவல், சிவிடி’ என, இருவித கியர் மாடல்களுடன், சந்தையில் கிடைக்கும்.
மாருதி
புதிய, ‘சுவிப்ட்’ ரெடி
மாருதி நிறுவனத்தின், ‘ஹேட்ச்பேக்’ ரக காரான, ‘சுவிப்ட்’ பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அதில் பல்வேறு மாற்றங்களை செய்து, அடுத்த தலைமுறை, சுவிப்ட் காரை அறிமுகம் செய்ய, மாருதி திட்டமிட்டு உள்ளது. வாடிக்கையாளர்களிடையே, இப்புதிய மாடலுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளதால், சில டீலர்கள் ரகசியமாக, அதிகாரபூர்வமற்ற முறையில், முன்பதிவு செய்ய துவங்கி உள்ளனர். ஊருக்கு தகுந்தபடி, முன்பதிவு தொகை மாறுபடுகிறது.
இப்புதிய மாடலில், வாகனத்தின் புறத்தோற்றம் அப்படியே இருந்தாலும், ‘ஹெட்லேம்ப், டெயில் லைட், நோஸ்’ ஆகியவற்றில், மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாம். பெட்ரோல் வேரியன்டில், முன்பிருந்த அதே, 1.2 லி.; டீசல் வேரியன்டில், அதே 1.3 லி., டீசல் இன்ஜின் தொடரும். ஆனால், டீசல் இன்ஜினின் சக்தியை கூட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. சேஸிஸ் இலகுவாக, அதே நேரத்தில் கடினமானதாக இருக்கும். உட்புறத்தில், ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவை அடங்கிய, தொடுதிரை இன்போடெயின்மென்ட் போன்ற பல புதிய அம்சங்கள் உண்டு.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|