பதிவு செய்த நாள்
10 ஜன2018
13:55
கோவை : தொலைதொடர்பு சேவைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பார்தி ஏர்டெல், கோயம்புத்தூரரில் அதன் VoLTE சேவைகள் தொடங்கப்படுவதை நேற்று அறிவித்திருக்கிறது.
4ஜி மீது செயலாற்றும் ஏர்டெல் VoLTE, அதிவேகமாக, மிக குறைந்த நேரத்திற்குள் அழைப்பை மேற்கொள்ளும் திறனோடு HD தரத்தில் குரலொலி அழைப்புகளை மாநகரைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் செய்வதை ஏதுவாக்கும்.
ஏர்டெல் VoLTE திறன் அம்சத்தை பயன்படுத்தி எந்தவொரு அலைபேசியையும் மற்றும் லேன்ட்லைன் வலையமைப்பையும் வாடிக்கையாளர்கள் அழைக்கலாம். VoLTE பயன்பாட்டுக்காக எவ்வித கூடுதல் தரவு கட்டணங்களும் வசூலிக்கப்படமாட்டாது மற்றும் ஏற்கனவே இருந்துவரும் திட்டம் அல்லது தொகுப்புகள் பலன்களின் படியே அழைப்புகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்.
ஏர்டெல் VoLTE-ஐ பிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களிலிருந்து உண்மையிலேயே வேறுபடுத்தி காட்டுவது என்னவென்றால், ஏர்டெல்-ன் விரிந்து பரந்த 4ஜி வலையமைப்பு கவரேஜால் ஏதுவாக்கப்பட்டுள்ள சிக்கலற்ற நேர்த்தியான இணைப்பு வசதியே. 4ஜி வலையமைப்பு கிடைக்கப்பெறாத நேர்விலும்கூட ஏர்டெல் VoLTE அழைப்புகள், தானியக்கமாக 3ஜி / 2ஜி வலையமைப்புக்கு வந்துவிடும் என்பதால் அனைத்து நேரங்களிலும் வாடிக்கையாளர்கள் தொடர்பில் தொடர்ந்து நீடிப்பது உறுதி செய்யப்படுகிறது. HD தரத்திலான குரலொலி அழைப்புகளையும் மற்றும் அதே நேரத்தில் உயர் வேகத்திலான தரவு பயன்பாட்டையும், வாடிக்கையாளர்கள் அனுபவித்து மகிழ்வதை ஏர்டெல் VoLTE வகை செய்யும்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டுக்கான பார்தி ஏர்டெல் ஹப் தலைமை செயல் அலுவலர் மனோஜ் முரளி பேசுகையில், 'கோயம்புத்தூரில் VoLTE சேவைகளை தொடங்கியிருப்பதன் மூலம் எமது VoLTE செயல் நடவடிக்கையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்வது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எமது உலகத்தரம் வாய்ந்த 4ஜி வலையமைப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் வாடிக்கையாளரின் அனுபவத்தையும் மற்றும் எமது ஸ்மார்ட்போன் வழங்கல்களின் அணிவரிசையையும் VoLTE சேவை இன்னும் சிறப்பானதாக மாற்றும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|