பதிவு செய்த நாள்
11 ஜன2018
00:19
புதுடில்லி:மத்திய அரசு, விமானம், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை விற்பனை, கட்டுமானம் ஆகிய துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.டில்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஒரு நிறுவனம், அதன் பொருட்களை மட்டுமே விற்கும், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை வர்த்தகத்தில், அரசு ஒப்புதலின்றி, 100 சதவீதம் முதலீடு செய்ய, ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த, 2014ல், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதில், 49 சதவீதத்திற்கு, மேற்பட்ட முதலீடுகளுக்கு, அரசு ஒப்புதல் தேவை என்ற விதிமுறை, தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால்,அதிகளவில் அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் கால் பதிக்கும்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நேற்றைய கூட்டத்தில், 'ஏர் - இந்தியா' நிறுவனத்தில், அன்னிய நிறுவனங்கள், அரசு அனுமதியுடன், 49 சதவீத முதலீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏற்கனவே, விமான சேவையில், அரசு ஒப்புதலுடன், 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனினும், பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் - இந்தியாவிற்கு மட்டும் பொருந்தாத இந்த விதிமுறை, தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால், நலிவுற்ற ஏர்- இந்தியா நிறுவனத்தில்,அன்னிய நிறுவனங்கள்ஆர்வமுடன் முதலீடு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, ரியல் எஸ்டேட் துறையில், தரகுச் சேவையில், அரசு ஒப்புதல்இன்றி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கும், மின் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், அன்னிய நிதி மற்றும்நிதி நிர்வாக நிறுவனங்கள்பங்கேற்கவும், மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|