வரிச்சலுகைகளை நீட்டிக்க, ‘தைபா’ கோரிக்கைவரிச்சலுகைகளை நீட்டிக்க, ‘தைபா’ கோரிக்கை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு ...
விமானம், சில்லரை விற்பனை, ரியல் எஸ்டேட் துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2018
00:19

புதுடில்லி:மத்திய அரசு, விமானம், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை விற்பனை, கட்டுமானம் ஆகிய துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.டில்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஒரு நிறுவனம், அதன் பொருட்களை மட்டுமே விற்கும், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை வர்த்தகத்தில், அரசு ஒப்புதலின்றி, 100 சதவீதம் முதலீடு செய்ய, ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த, 2014ல், 'சிங்கிள் பிராண்டு' சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதில், 49 சதவீதத்திற்கு, மேற்பட்ட முதலீடுகளுக்கு, அரசு ஒப்புதல் தேவை என்ற விதிமுறை, தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால்,அதிகளவில் அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் கால் பதிக்கும்; வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நேற்றைய கூட்டத்தில், 'ஏர் - இந்தியா' நிறுவனத்தில், அன்னிய நிறுவனங்கள், அரசு அனுமதியுடன், 49 சதவீத முதலீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏற்கனவே, விமான சேவையில், அரசு ஒப்புதலுடன், 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனினும், பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் - இந்தியாவிற்கு மட்டும் பொருந்தாத இந்த விதிமுறை, தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால், நலிவுற்ற ஏர்- இந்தியா நிறுவனத்தில்,அன்னிய நிறுவனங்கள்ஆர்வமுடன் முதலீடு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, ரியல் எஸ்டேட் துறையில், தரகுச் சேவையில், அரசு ஒப்புதல்இன்றி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கும், மின் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், அன்னிய நிதி மற்றும்நிதி நிர்வாக நிறுவனங்கள்பங்கேற்கவும், மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.



வேலையிழப்பு ஏற்படும்

'சிங்கிள் பிராண்டு' சில்லரை விற்பனையில், தன்னிச்சையான, 100 சதவீத அன்னிய நேரடி 
முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ளதை கண்டிக்கிறோம். இதனால், ஏராளமான அன்னிய நிறுவனங்கள், சுலபமாக இந்திய சந்தையில் புகுந்து விடும். சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படுவர்; ஏராளமானோர் வேலையிழக்க நேரிடும்.

இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)