பதிவு செய்த நாள்
11 ஜன2018
00:22
வாஷிங்டன்:வலைதளங்களில் மட்டும் புழங்கும், ‘பிட்காயின், எத்திரியம்’ போன்ற மெய்நிகர் கரன்சிகளை போல, கேமரா தயாரிக்கும், கோடக் நிறுவனமும், ‘கோடக் காயின்’ என்ற வலைதள கரன்சியை அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, வென் டிஜிட்டல் நிறுவனத்துடன், கோடக் நிறுவனம் இணைந்துள்ளது.இம்மாத இறுதியில், இந்த கரன்சிக்கான,ஐ.சி.ஓ., எனப்படும், புதிய டோக்கன் வெளியீடு நடைபெறும்.
இந்த டோக்கன்களில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஒருசில நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்யலாம் என, கோடக் நிறுவனம் தெரிவித்துள்ளது.உரிய விதிமுறைகளை பின்பற்றி வெளியிடப்படும் இந்த டோக்கன்கள் மூலம், புகைப்பட கலைஞர்கள், தங்கள் படைப்புகளின் வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.புகைப்பட கலைஞர்கள், பாதுகாப்பான முறையில், தங்கள் படங்களின் வர்த்தகத்தில் ஈடுபட, கோடக் காயின் உதவும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோடக் நிறுவனத்தின், கோடக் காயின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தைகளில், ஈஸ்ட்மென் கோடக் நிறுவனத்தின் பங்குகள் விலை, 117 சதவீதம் அதிகரித்து உள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|