பதிவு செய்த நாள்
12 ஜன2018
00:53
புதுடில்லி:‘அன்னிய முதலீடுகளை, நிபந்தனைகளுடன் ஏற்க தயார்’ என, பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேதம் சார்ந்த பல்வேறு பொருட்களின் விற்பனையில், மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது.அதனால், இந்நிறுவனத்தில் பங்கு மூலதனம் மேற்கொள்ள, எல்.கேட்டர்டன் உள்ளிட்ட, பல வெளிநாட்டு நிறுவனங்கள்முயன்று வருகின்றன.வழக்கமாக, 10 -– 20 கோடி டாலர் முதலீடு செய்யும், எல்.கேட்டர்டன் நிறுவனம், பதஞ்சலியில், 50 கோடி டாலர் முதலீடு செய்து, அதன் பொருட்களை, சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல தயார் என, தெரிவித்துள்ளது.
இது குறித்து, பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியதாவது:விரிவாக்கத் திட்டங்களுக்கு, 5,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. சுதேசி தொழிலை ஊக்குவிப்பது தான், எங்கள் நோக்கம். உலகமே ஒருவரை ஒருவர் சார்ந்து தான் இயங்குகிறது.எங்களுக்கு உதவ, பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்திய ரூபாயில், வங்கியை விட குறைந்த வட்டியில் கடனாக வழங்கினால் ஏற்போம். பங்கு முதலீட்டை ஏற்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|